மந்திரம் உச்சரிக்கும் முறை
மந்திரம் உச்சரிக்கும் முறை
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்) சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.
முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார்.
பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார். முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.
உதாரணமாக :
முதலில் "ஓம்" பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.
நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.
இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.
சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்
ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்
பதினெண்பேரை காணும் மந்திரம்" - ஓம் சிங்ரங் அங்சிங்
தமிழர்களின் ஞான பொக்கிஷமான ஞானக்கோவையில் இருந்து பதினெட்டு சித்தர்களை தரிசிக்கும் முறையை நிஜானந்த போதம் பின்வருமாறு கூறுகிறது.
நிஜானந்த போதம் : 41
செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச்
செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால்
உத்தமனே சகலசித்துக் குதவியாமே...
மந்திர சித்தி
"ஆதி மயமாய் விளங்கு மந்திரதோத்திரம்
அரி ஓம் ஓம்யென்ற ருட்கண் சாத்தி
நீதியுடன் நேமமனுட்டா னஞ்செய்து
நிரஞ்சனமாஞ் சற்குருவை நீதியாக
ஓதியிரு கலையறிந்து வாசிகொண்டு
உண்மையுடன் சுழிமுனையில் ஓம்யென்றுண்ணே
ஓம்றிங்றிங் சிம் நசிமசிமசி சிவசிவய நம
ஓம்உம்கிலி அங்லங்அம் சிவயநம
ஓம்வங்சிங் ரங்ரங் சிவயநம
ஓம்வயநமசி உம்உம்லங் சிவயநம
ஓம்நங்கிலி நமவம்வசி வயநம
ஒம் மசிமசி சிவசிவ நம் ஓங்அங்
அங்லங்றிங் சிவய நம
ஓம் அம்உம் நம்சிம்சிவ சிவாயநமஓம்
சிங்கிலி நமசிவய நமஓம் சிவசிவா
நசிநசி சிவய நம ஓம்
மங்கிலிசிங்கி சிவசுவய நமஓம்
மசிமசிவய மசிவய நமஓம்
றிங்றிங் சவ்றிங்சிவய நமஓம்
லங்லங் ருங்றிங் சிவய நமஓம்
லாலீலூலம் சிங்சிவய நமஓம்
ஓம்சிவ சிவமந்திர தோத்திரந்தன்னை
உண்மையுட னந்திசந்தி யுருவே செய்தால்
தாம் சிவசிவ ரூபந்தானே யாடுஞ்
சகலகலைக் கியானமெல்லாந் தன்னுள் தங்கும்
ஆம் சிவசிவ யோகமருளே காணும்
அட்டமாசித்து களுமாடலாகும்
ஓம்சிவ பில்லிவிச ரோகமெல்லாம்
ஓடுமடா மந்திர தோத்திரத்தின் சித்தே"
இந்தத் தோத்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் அந்தத் தோத்திரத்திலேயே விளக்குகிறார் அகத்தியர்
Comments
Post a Comment