லம்பிகா யோகம் (அ) கேசரி யோக ரகசியம்
லம்பிகா யோகம் (அ) கேசரி யோகம்
மரணமில்லாமல் வாழ பசியை வெல்லும் கேசரி யோகம் .
**********************************************************
( மரணமில்லாமல் வாழ பசியை வெல்லும் கேசரி யோகம் அடங்கியுள்ள சூக்சும ரகசியங்களை 9000 வருடங்களுக்கு முன்னரே என் ஐயன் திருமூலன் சொல்லுகிறான் .. கேட்பவர்கள் கேளுங்கள் ………)
முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.
எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.
மேலும் #மரணத்தை_வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர்.
அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும்.இதனை யோக நூல்கள் கேசரிமுத்திரை என்று அழைக்கின்றன.
உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பல ஆண்டுகள் அப்படியே இருக்கும். அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன.
உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.
சித்தர்கள் இந்த லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள்.பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.தான் நினைத்தபோது உடலை நீக்கி இறைநிலை அடைந்தார்கள்.
லம்பிகா யோகம்
ராஜ நாகம் நல்ல பாம்பு இவ்விரண்டு வகைப் பாம்புகளும் புற்றுக்குள் நுழையும்போது தலையை வெளியே நீட்டிக்கொண்டு வால் பகுதியை முதலில் நுழைத்து தலைகீழாக புற்றுக்குள் செல்லும்.இவ்வாறு புற்றுக்குள் சென்றவுடன் அவைகளின் இரட்டை நாக்குகளில் ஒன்றை உள்நாக்கு வழியாக மேலண்ணத்தில் நுழைத்து உச்சந்தலையில் வைத்துவிட பசி தாகம்,குளிர்,மழை போன்றவற்றால் பாதிக்கப்படாமல் வாழும்.
ஊர்வனவற்றில் பாம்பு, அரணை, உடும்பு இவற்றுக்கு இரட்டை நாக்குகள் உள்ளன.
சாதகமான பருவநிலைகளை தோலின் உணர்வுகள் மூலம் அறிந்துகொண்டு மற்றொரு நாக்கின் மூலம் தலைக்குள் செலுத்திய நாக்கை எடுத்துக் கொண்டு உடல் உணர்வு நிலையடைந்து வெளியே வரும்.
இதேபோல சித்தர்களும் தங்கள் நாக்கின் அடிப்பாகத்தை அறுத்துக்கொண்டு நாக்கின் நீளத்தை கூட்டி மேலண்ணத்தின் வழியாக தலையின் மேல்பகுதியில் கொண்டுவந்து,இடை பிங்களை என்ற இரு நாசிகளின் மூச்சை நிறுத்தி,நடுநாடி என்று அழைக்கப்படும் சுஷும்னா நாடி வழியே நாக்கை செலுத்தி கபாலத் தேன் என்று அழைக்கப்படும் புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் திரவத்தை கட்டுப்படுத்தினால் இவ்வுடல் மரணம் அடைவதில்லை மூப்பு அடைவதில்லை,என்றும் இளமையாக வாழலாம்.ஜீவசமாதிநிலை அடையலாம்.
“ஜீவன்” என்றால் உயிர். “சமாதி” என்றால் சமன் – ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.சில யோகிகள் காடுகளுக்கு சென்று இலம்பிகா யோக நிலையில் அமர்ந்து விடுவார்கள்.அவர்களது உடலில் கரையான்,மண் புற்றுகளால் மூடப்பட்டாலும் மரணமின்றி பல ஆண்டுகள் யோக நிலையில் அமர்ந்திருப்பார்கள்.இந்த யோகத்தை தகுந்த குருவின் மூலம் தான் படிப்படியாக கற்க வேண்டும்.காரணம் நாகங்களில் இரட்டை நாக்கு இருப்பதால் மேலே சென்ற ஒரு நாக்கை
இன்னொரு நாக்கால் இழுத்து விட்டுக் கொள்ள முடியும்.
ஆனால் மனிதர்களால் உட்சென்ற நாக்கை குரு அல்லது இன்னொரு நபர் தலையில் ஓங்கி வேகமாக அடித்தால்தான் சாதாரன நிலைக்குவரமுடியும்.
இந்த யோகத்துக்கு #சர்ப்ப_சாம்பவி_
மகா_உபதேசம் என்று நாகாலாந்து யோகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
லம்பிகா யோகம் பற்றிய சித்தர் பாடல்களை கீழே படித்துப்பாருங்கள்.
#இடைக்காட்டு_சித்தர் பாடல் வரிகள்
“அண்ணாக்கை யூடே அமுதுண்ணேன் மெய்ஞானம் ஒன்றன்றி வேறே ஒன்றை நண்ணேன்”-
இதன் பொருள்; நாக்கை நடு நாடியுள் செலுத்த கபாலத்தேன் சுரக்கும்.அதனைக் கட்டுப்படுத்தினால் மெய்ஞானம் பிறக்கும்.
சித்தர் #சிவவாக்கியர் பாடல் வரிகள்
“ஆக்கை மூப்பதில்லையே யாதிகார ணத்தினாலே நாக்கை மூக்கை யுள் மடித்து நாத நாடி யூடுபோய் ஏக்கறுத்தி ரெட்டையு மிக்கழுத்த வல்லீரேல் பார்க்கப் பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்ம மாகுமே”
இதன் பொருள்;
நாக்கை இழுத்து வெட்டிவிட்டுக் கொண்டு மேலண்னத்தில் மூக்கிற்கு உள் உள்ள குருநாடியுள் செலுத்தி இடை பிங்களையாகிய வலது இடது நாசி சுவாசத்தை நிறுத்தி நடுநாடியாகிய பிரம்ம நாடியுள் சுரக்கும் திரவ சக்தியை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் இவ்வுடம்பு மூப்பு அடைவதில்லை. வயோதிகம் அடைவதில்லை.எங்கும் நிறைந்த இறைவனை பார்க்கும் இடங்களில் எல்லாம் உணர்ந்தறியலாம்.
அட்டாங்க யோகத்தில் எட்டு விதமான யோகநிலைகளைக் கூறியபிறகு மேலும் சில யோகவகைகளைத் திருமூலர் கூறியிருக்கிறார்.
கேசரி என்பதற்கு சிங்கம் என்றும் ஆகாயம் என்றும் பொருள். கேசரியோகமாவது சிங்கத்தைப் போல் பார்வையை மேல்நோக்கிச் செலுத்தியிருப்பதாகும். இந்த யோகத்தால் சீவன் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலைப் பெறுவதால் கேசரியோகம் என்று பெயர் பெற்றது.
கேசரியோகத்தை மூன்று விதமாகப் பயிலும் முறையைத் திருமூலர் விளக்குகிறார். அது அடயோகம், இலம்பிகாயோகம் மற்றும் இராஜயோகம் என்ற மூன்று பிரிவில் அடங்கும். உடலை வருத்திப் பிராணாயாமம் பயிற்சி செய்து தேக சித்தி அடைந்து சமாதி நிலையைப் பெறுதல் அடயோக முறையாகும்.இலம்பிகா யோகப் பயிற்சியால் இலய யோக முறையில் நாக்கை மடித்து உள்நாக்குப் பிரதேசத்தில் உள்ள துவாரத்தை அடைத்துப் பிராண செயம் பெற்றுச் சமாதி நிலையைப் பெறுதல் இரண்டாவது வகையாகும்.
இனி மூன்றாவது முறை அறிவினால் அகண்டப் பொருளைத் தியானம் செய்து கண்டப் பொருளாகிய தேகத்தில் சக்தியை மாற்றி விடுவதில் சமாதி நிலை அடைதல் இராஜயோகம் ஆகும். ஆக, இம் மூன்று வகையான பயிற்சியாலும் அடையும் பயன் சமாதிநிலை என்ற ஒன்றேயாகும். இந்த முறை சாதகனின் தகுதியைப் பொறுத்து அமையும்.
இலம்பிகா யோகம் தான் கேசரி முத்திரை யோகமாகச் சொல்லப் படுகிறது.கேசரி முத்திரை யோகம் பயிற்சி.சாதகர் ஆசனத்தில் அமர்ந்து நாவின் நுனியை அண்ணாக்கின் மேல் வீசியிருக்க வேண்டும்.இங்கு நாக்கை மடித்து அண்ணாக்கில் ஏற்றிச் செய்யும் முறையான இலம்பிகா யோகத்தைத் திருமூலர் சொல்லுகிறார்.அவ்வாறு சாதனை செய்து வந்தால் பிராணன் அண்ணாக்கின் வழியாக பிரம்மரந்திரம் செல்லும். அதுவே சீவனும் சிவமும் உறைகின்ற இடமாகும். அங்கே பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் முப்பத்து முக்கோடி தேவரும் உள்ளனர். இந்த நிலையை அடைந்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள்.நாவில் நுனியை நடுவே விசிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லைச் சதகோடி யூனே -திருமந்திரம் 803.
இவ்வாறு நாவை மடித்து மேலே ஏற்றியிருக்கும் போது பிராண அபானன்களாகிய இரண்டும் அண்ணாக்கின் வழியாக மேலே செல்லச் சுழுமுனை திறக்கும் என்று திருமூலர் கூறுகிறார்.
அச்சாதகர் நரை திரையின்றிப் பாலகனாகவே வாழ்வார்.இம்முறையில் சிவனை முன்னிட்டுக் கொண்டு நாவினை மேலேறும் படிச்செய்து அங்கே நடுநாடியின் உச்சியில் சந்தித்திருப்பின் அச்சாதகர் உலகம் முழுவதும் ஆள்வார்.அவரது பிராணன் இலயமடைந்து உடலோட பொருந்தியிருக்கும் அறிவு விடுபட்டு நிற்கும். நடு நாடியின் உச்சியில் பொருந்தி உடலறிவு நீங்கி நிற்கும் சாதகரே உண்மையான அக்கினிக் காரியம் செய்தவராவார்.
“நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே” -திருமந்திரம் 806
நாவினால் சாதனை செய்து இன்பத்தைக் கண்டவர் நடுநாடியின் கோணலை நிமிர்ந்து நிற்கச் செய்து இந்த ஊனுடலிலேயே அமுதத்தைக் காண்பர்.அவ்வழியாகச் சென்று அமுதத்தைப் பருகிச் “சிவாயநம” எனச் சிந்தித்திருப்பார்க்கு கங்காப் பிரவாகம் போன்ற ஒளி முகத்தின் முன் பெருகும். அந்த ஆகாய கங்கையில் மூழ்கித் திளைத்திருங்கள் என்கிறார் திருமூலர்.
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுச் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும் வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும் வழி வாய்ந் தறிவீரே -திருமந்திரம் 807
இந்த நிலை எய்தியவரது உடம்பே சிவனுறையும் கோயிலாகும்.“ஊனுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில் ” என்றும் திருமூலர் கூறுவதையும் தெரிந்து மிக மகிழவும்.எந்தையே யீசா உடலிடங் கொண்டாய்” என்ற மாணிக்க வாசகரது வாக்காலும் இவ்வுடம்பு சிவன் உறையும் கோயிலாகும் என்பது புலனாகிறது.
ஆற்றலையுடைய சக்தியும் சாதகருக்கு விளங்குவாள். அப்போது உண்மை ஞானம் விளங்கிச் சாதகர் சிவசக்தியோடு பொருந்தியிருக்கும் நிலை உண்டாகும்.
இச்சாதகருக்குப் பிராணன் கண்டத்திலிருந்து உள்முகமாக மேல் நோக்கிச் செல்லும். அவரது சிரசின் மேலுள்ள சகஸ்ர தளம் விரிந்து விளங்கிப் பூமண்டலத்தில் நீடூழி வாழ்வர்.
எவன் கேசரி முத்திரையால் அண்ணாக்கின் அடியில் உள்ள துவாரத்தை அடைத்து விடுகிறானோ அவனுக்கு அமுத வடிவான வீரியமானது யோனி வடிவ அக்னியில் வீழ்வதில்லை. பிராண அபானன்களாகிய காற்றும் அலையாது நிலை பெறுகின்றது. மற்றும் அவனுக்குப் பசி உண்டாவதில்லை. அவன் மரிப்பதே இல்லை என்று அறிக. இந்தக் கேசரி முத்திரையை குருவிடம் கேட்டு அதன்படி நன்றாகப் பயின்று அதன் உண்மையைத் தெரிந்து கொண்டவனுக்கே இவ்விதப் பயன்கூடும்.
★அங் முத்திரை விளையாட்டாக செய்தால் தானாகவே நாக்கு உள்நோக்கி செல்லும். தவம் செய்யும் போது அங் முத்திரை செய்து பழகினால் இயல்பான நிலையில் தானாகவே நாக்கு உள் நாக்கிற்கு மேலே தொடும். அங் முத்திரை செய்வது மிகவும் எளிது . நாக்கை மடித்து மேல் தொண்டையில் நாக்கின் நுனி படுமாறு வைப்பதே அங் முத்திரை.
அந்த சமயத்தில் அமிழ்தம் சொட்டு சொட்டாக சுரக்கும். அமிழ்தம் தேன் போல இனிக்கும். அந்த இனிப்பு சுவையே அமிர்தம் என்கிறார்கள். இதையே பேரின்பம் என்று கூறுகிறார்கள். அமிழ்தம் சுரந்துவிட்டால் பசி எடுக்காது. 24 மணி நேரமும் அமிழ்தம் அண்ணாக்கு மேலே சுரப்பதனால் பசியை வெல்லும் தன்மை வரும். கேசரி யோகம் சித்தி ஆகும். பசிக்கு உணவே கிடைக்கவில்லை என்ன நிலை வரும்போது எவர் உதவியையும் தேட வேண்டியதில்லை. ஒரு மண் புழு தனக்கு தானே recycling செய்து கொள்வது போல மனிதனும் தனக்கு தானே உயர் சக்தியை recycling செய்து கொள்ளலாம்.
★அந்த சமயத்தில் மூச்சு காற்று மூக்கின் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக சுழுமுனை நாடி திறந்து முதுகுதண்டு மூலமாக செல்லும். சுழுமுனை நாடி திறந்துவிட்டால் மரணம் இல்லை. மரணத்தை வென்ற மகான்கள் இந்த உலகில் இருக்க விரும்ப மாட்டார்கள் . அவர்கள் உடம்பில் இருந்து உயிரை பிரித்து சிவகலத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள். அதுவே முழுமையான வீடுபேறு.
★யோகம் என்பதை விளையாட்டாக செய்ய வேண்டியது தான். எதையும் serious ஆக செய்தால் ஆபத்து. முனிவர்கள் , சித்தர்கள் அட யோகம் செய்வார்கள். ஆனால் இல்லறத்தில் இருப்பவர்கள் கடும் தவம் செய்ய வேண்டிய தேவை இல்லை . எந்த செயலையும் தியானமாக மாற்றலாம். நடக்கும் போது, உண்ணும் போதும் , உறங்கும் போதும் சிவலயத்தில் இருந்தால் அது 24 மணி நேரமும் தவம் செய்ததற்கு சமம்.
★பதஞ்சலி மாமுனிவரைப் போலவே திருமூலரும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார். அவர் மேலும் நான்கு உன்னதமான யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார். அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால் இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம்.
மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம் எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.
★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம், அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும்.
முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
கேசரி யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆
★கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே. திருமந்திரம் -779.
★அண்ணாக்கை ஊடே அடைத்து அமுதுண்ணேன் அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.
★சூல் கொண்ட மேகம் என ஊமை நின்று சொறிவதைப் பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவேனே. – தாயுமானவர்.
★கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம் கூடிய முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் – அருணகிரிநாதர்.
★மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப் பற்றி பாடியுள்ளார்கள்
.
★கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன் கண்நரம்புகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும் நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து வரவேண்டும். நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல் நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்துவர வேண்டும். பார்வையை புருவ மத்தியில் குவிக்கவேண்டும். பெருவிரலை உட்பக்கமாக வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில் தொடும்படி வைத்துக் கொண்டு சுழுமுனை தியானம் செய்து வரவேண்டும்.
★நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம் சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம் சித்திக்கும். தொலைவில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர் சொல்கிறார்.
★நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை செல்லுமானால் நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அண்ணாக்கின் மேல் துவாரத்தில் நாக்கை நுழைத்தவுடன் உடல் மறதி ஏற்பட்டுவிடும். மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் உடல் அழியாது, உயிரும் பிரியாது. இயற்கை சீற்றங்களினால் அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க முடியாது. நகமும், முடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள் ஜீவசமாதியில் இருப்பது இவ்வாறே என்று சொல்லப் படுகிறது. தேரை, கருநாகம், நல்லபாம்பு போன்ற உயிரினங்களும் உணவு கிடைக்காத போது இந்த பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப் பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல் உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு கிடைக்கும் போது நாவை எடுத்து புசிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
★அனுபவம் உள்ள சித்தர்கள் தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக் கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர் உதவியோடு மெதுவாக வாயைத் திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை கால்கள் முடங்கி இருப்பதை மெதுவாகத் தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.
மரணமில்லாமல் வாழ பசியை வெல்லும் கேசரி யோகம் .
**********************************************************
( மரணமில்லாமல் வாழ பசியை வெல்லும் கேசரி யோகம் அடங்கியுள்ள சூக்சும ரகசியங்களை 9000 வருடங்களுக்கு முன்னரே என் ஐயன் திருமூலன் சொல்லுகிறான் .. கேட்பவர்கள் கேளுங்கள் ………)
முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.
எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.
மேலும் #மரணத்தை_வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர்.
அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும்.இதனை யோக நூல்கள் கேசரிமுத்திரை என்று அழைக்கின்றன.
உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பல ஆண்டுகள் அப்படியே இருக்கும். அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன.
உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.
சித்தர்கள் இந்த லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள்.பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.தான் நினைத்தபோது உடலை நீக்கி இறைநிலை அடைந்தார்கள்.
லம்பிகா யோகம்
ராஜ நாகம் நல்ல பாம்பு இவ்விரண்டு வகைப் பாம்புகளும் புற்றுக்குள் நுழையும்போது தலையை வெளியே நீட்டிக்கொண்டு வால் பகுதியை முதலில் நுழைத்து தலைகீழாக புற்றுக்குள் செல்லும்.இவ்வாறு புற்றுக்குள் சென்றவுடன் அவைகளின் இரட்டை நாக்குகளில் ஒன்றை உள்நாக்கு வழியாக மேலண்ணத்தில் நுழைத்து உச்சந்தலையில் வைத்துவிட பசி தாகம்,குளிர்,மழை போன்றவற்றால் பாதிக்கப்படாமல் வாழும்.
ஊர்வனவற்றில் பாம்பு, அரணை, உடும்பு இவற்றுக்கு இரட்டை நாக்குகள் உள்ளன.
சாதகமான பருவநிலைகளை தோலின் உணர்வுகள் மூலம் அறிந்துகொண்டு மற்றொரு நாக்கின் மூலம் தலைக்குள் செலுத்திய நாக்கை எடுத்துக் கொண்டு உடல் உணர்வு நிலையடைந்து வெளியே வரும்.
இதேபோல சித்தர்களும் தங்கள் நாக்கின் அடிப்பாகத்தை அறுத்துக்கொண்டு நாக்கின் நீளத்தை கூட்டி மேலண்ணத்தின் வழியாக தலையின் மேல்பகுதியில் கொண்டுவந்து,இடை பிங்களை என்ற இரு நாசிகளின் மூச்சை நிறுத்தி,நடுநாடி என்று அழைக்கப்படும் சுஷும்னா நாடி வழியே நாக்கை செலுத்தி கபாலத் தேன் என்று அழைக்கப்படும் புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் திரவத்தை கட்டுப்படுத்தினால் இவ்வுடல் மரணம் அடைவதில்லை மூப்பு அடைவதில்லை,என்றும் இளமையாக வாழலாம்.ஜீவசமாதிநிலை அடையலாம்.
“ஜீவன்” என்றால் உயிர். “சமாதி” என்றால் சமன் – ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.சில யோகிகள் காடுகளுக்கு சென்று இலம்பிகா யோக நிலையில் அமர்ந்து விடுவார்கள்.அவர்களது உடலில் கரையான்,மண் புற்றுகளால் மூடப்பட்டாலும் மரணமின்றி பல ஆண்டுகள் யோக நிலையில் அமர்ந்திருப்பார்கள்.இந்த யோகத்தை தகுந்த குருவின் மூலம் தான் படிப்படியாக கற்க வேண்டும்.காரணம் நாகங்களில் இரட்டை நாக்கு இருப்பதால் மேலே சென்ற ஒரு நாக்கை
இன்னொரு நாக்கால் இழுத்து விட்டுக் கொள்ள முடியும்.
ஆனால் மனிதர்களால் உட்சென்ற நாக்கை குரு அல்லது இன்னொரு நபர் தலையில் ஓங்கி வேகமாக அடித்தால்தான் சாதாரன நிலைக்குவரமுடியும்.
இந்த யோகத்துக்கு #சர்ப்ப_சாம்பவி_
மகா_உபதேசம் என்று நாகாலாந்து யோகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
லம்பிகா யோகம் பற்றிய சித்தர் பாடல்களை கீழே படித்துப்பாருங்கள்.
#இடைக்காட்டு_சித்தர் பாடல் வரிகள்
“அண்ணாக்கை யூடே அமுதுண்ணேன் மெய்ஞானம் ஒன்றன்றி வேறே ஒன்றை நண்ணேன்”-
இதன் பொருள்; நாக்கை நடு நாடியுள் செலுத்த கபாலத்தேன் சுரக்கும்.அதனைக் கட்டுப்படுத்தினால் மெய்ஞானம் பிறக்கும்.
சித்தர் #சிவவாக்கியர் பாடல் வரிகள்
“ஆக்கை மூப்பதில்லையே யாதிகார ணத்தினாலே நாக்கை மூக்கை யுள் மடித்து நாத நாடி யூடுபோய் ஏக்கறுத்தி ரெட்டையு மிக்கழுத்த வல்லீரேல் பார்க்கப் பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்ம மாகுமே”
இதன் பொருள்;
நாக்கை இழுத்து வெட்டிவிட்டுக் கொண்டு மேலண்னத்தில் மூக்கிற்கு உள் உள்ள குருநாடியுள் செலுத்தி இடை பிங்களையாகிய வலது இடது நாசி சுவாசத்தை நிறுத்தி நடுநாடியாகிய பிரம்ம நாடியுள் சுரக்கும் திரவ சக்தியை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் இவ்வுடம்பு மூப்பு அடைவதில்லை. வயோதிகம் அடைவதில்லை.எங்கும் நிறைந்த இறைவனை பார்க்கும் இடங்களில் எல்லாம் உணர்ந்தறியலாம்.
அட்டாங்க யோகத்தில் எட்டு விதமான யோகநிலைகளைக் கூறியபிறகு மேலும் சில யோகவகைகளைத் திருமூலர் கூறியிருக்கிறார்.
கேசரி என்பதற்கு சிங்கம் என்றும் ஆகாயம் என்றும் பொருள். கேசரியோகமாவது சிங்கத்தைப் போல் பார்வையை மேல்நோக்கிச் செலுத்தியிருப்பதாகும். இந்த யோகத்தால் சீவன் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலைப் பெறுவதால் கேசரியோகம் என்று பெயர் பெற்றது.
கேசரியோகத்தை மூன்று விதமாகப் பயிலும் முறையைத் திருமூலர் விளக்குகிறார். அது அடயோகம், இலம்பிகாயோகம் மற்றும் இராஜயோகம் என்ற மூன்று பிரிவில் அடங்கும். உடலை வருத்திப் பிராணாயாமம் பயிற்சி செய்து தேக சித்தி அடைந்து சமாதி நிலையைப் பெறுதல் அடயோக முறையாகும்.இலம்பிகா யோகப் பயிற்சியால் இலய யோக முறையில் நாக்கை மடித்து உள்நாக்குப் பிரதேசத்தில் உள்ள துவாரத்தை அடைத்துப் பிராண செயம் பெற்றுச் சமாதி நிலையைப் பெறுதல் இரண்டாவது வகையாகும்.
இனி மூன்றாவது முறை அறிவினால் அகண்டப் பொருளைத் தியானம் செய்து கண்டப் பொருளாகிய தேகத்தில் சக்தியை மாற்றி விடுவதில் சமாதி நிலை அடைதல் இராஜயோகம் ஆகும். ஆக, இம் மூன்று வகையான பயிற்சியாலும் அடையும் பயன் சமாதிநிலை என்ற ஒன்றேயாகும். இந்த முறை சாதகனின் தகுதியைப் பொறுத்து அமையும்.
இலம்பிகா யோகம் தான் கேசரி முத்திரை யோகமாகச் சொல்லப் படுகிறது.கேசரி முத்திரை யோகம் பயிற்சி.சாதகர் ஆசனத்தில் அமர்ந்து நாவின் நுனியை அண்ணாக்கின் மேல் வீசியிருக்க வேண்டும்.இங்கு நாக்கை மடித்து அண்ணாக்கில் ஏற்றிச் செய்யும் முறையான இலம்பிகா யோகத்தைத் திருமூலர் சொல்லுகிறார்.அவ்வாறு சாதனை செய்து வந்தால் பிராணன் அண்ணாக்கின் வழியாக பிரம்மரந்திரம் செல்லும். அதுவே சீவனும் சிவமும் உறைகின்ற இடமாகும். அங்கே பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் முப்பத்து முக்கோடி தேவரும் உள்ளனர். இந்த நிலையை அடைந்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள்.நாவில் நுனியை நடுவே விசிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லைச் சதகோடி யூனே -திருமந்திரம் 803.
இவ்வாறு நாவை மடித்து மேலே ஏற்றியிருக்கும் போது பிராண அபானன்களாகிய இரண்டும் அண்ணாக்கின் வழியாக மேலே செல்லச் சுழுமுனை திறக்கும் என்று திருமூலர் கூறுகிறார்.
அச்சாதகர் நரை திரையின்றிப் பாலகனாகவே வாழ்வார்.இம்முறையில் சிவனை முன்னிட்டுக் கொண்டு நாவினை மேலேறும் படிச்செய்து அங்கே நடுநாடியின் உச்சியில் சந்தித்திருப்பின் அச்சாதகர் உலகம் முழுவதும் ஆள்வார்.அவரது பிராணன் இலயமடைந்து உடலோட பொருந்தியிருக்கும் அறிவு விடுபட்டு நிற்கும். நடு நாடியின் உச்சியில் பொருந்தி உடலறிவு நீங்கி நிற்கும் சாதகரே உண்மையான அக்கினிக் காரியம் செய்தவராவார்.
“நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே” -திருமந்திரம் 806
நாவினால் சாதனை செய்து இன்பத்தைக் கண்டவர் நடுநாடியின் கோணலை நிமிர்ந்து நிற்கச் செய்து இந்த ஊனுடலிலேயே அமுதத்தைக் காண்பர்.அவ்வழியாகச் சென்று அமுதத்தைப் பருகிச் “சிவாயநம” எனச் சிந்தித்திருப்பார்க்கு கங்காப் பிரவாகம் போன்ற ஒளி முகத்தின் முன் பெருகும். அந்த ஆகாய கங்கையில் மூழ்கித் திளைத்திருங்கள் என்கிறார் திருமூலர்.
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுச் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும் வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும் வழி வாய்ந் தறிவீரே -திருமந்திரம் 807
இந்த நிலை எய்தியவரது உடம்பே சிவனுறையும் கோயிலாகும்.“ஊனுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில் ” என்றும் திருமூலர் கூறுவதையும் தெரிந்து மிக மகிழவும்.எந்தையே யீசா உடலிடங் கொண்டாய்” என்ற மாணிக்க வாசகரது வாக்காலும் இவ்வுடம்பு சிவன் உறையும் கோயிலாகும் என்பது புலனாகிறது.
ஆற்றலையுடைய சக்தியும் சாதகருக்கு விளங்குவாள். அப்போது உண்மை ஞானம் விளங்கிச் சாதகர் சிவசக்தியோடு பொருந்தியிருக்கும் நிலை உண்டாகும்.
இச்சாதகருக்குப் பிராணன் கண்டத்திலிருந்து உள்முகமாக மேல் நோக்கிச் செல்லும். அவரது சிரசின் மேலுள்ள சகஸ்ர தளம் விரிந்து விளங்கிப் பூமண்டலத்தில் நீடூழி வாழ்வர்.
எவன் கேசரி முத்திரையால் அண்ணாக்கின் அடியில் உள்ள துவாரத்தை அடைத்து விடுகிறானோ அவனுக்கு அமுத வடிவான வீரியமானது யோனி வடிவ அக்னியில் வீழ்வதில்லை. பிராண அபானன்களாகிய காற்றும் அலையாது நிலை பெறுகின்றது. மற்றும் அவனுக்குப் பசி உண்டாவதில்லை. அவன் மரிப்பதே இல்லை என்று அறிக. இந்தக் கேசரி முத்திரையை குருவிடம் கேட்டு அதன்படி நன்றாகப் பயின்று அதன் உண்மையைத் தெரிந்து கொண்டவனுக்கே இவ்விதப் பயன்கூடும்.
★அங் முத்திரை விளையாட்டாக செய்தால் தானாகவே நாக்கு உள்நோக்கி செல்லும். தவம் செய்யும் போது அங் முத்திரை செய்து பழகினால் இயல்பான நிலையில் தானாகவே நாக்கு உள் நாக்கிற்கு மேலே தொடும். அங் முத்திரை செய்வது மிகவும் எளிது . நாக்கை மடித்து மேல் தொண்டையில் நாக்கின் நுனி படுமாறு வைப்பதே அங் முத்திரை.
அந்த சமயத்தில் அமிழ்தம் சொட்டு சொட்டாக சுரக்கும். அமிழ்தம் தேன் போல இனிக்கும். அந்த இனிப்பு சுவையே அமிர்தம் என்கிறார்கள். இதையே பேரின்பம் என்று கூறுகிறார்கள். அமிழ்தம் சுரந்துவிட்டால் பசி எடுக்காது. 24 மணி நேரமும் அமிழ்தம் அண்ணாக்கு மேலே சுரப்பதனால் பசியை வெல்லும் தன்மை வரும். கேசரி யோகம் சித்தி ஆகும். பசிக்கு உணவே கிடைக்கவில்லை என்ன நிலை வரும்போது எவர் உதவியையும் தேட வேண்டியதில்லை. ஒரு மண் புழு தனக்கு தானே recycling செய்து கொள்வது போல மனிதனும் தனக்கு தானே உயர் சக்தியை recycling செய்து கொள்ளலாம்.
★அந்த சமயத்தில் மூச்சு காற்று மூக்கின் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக சுழுமுனை நாடி திறந்து முதுகுதண்டு மூலமாக செல்லும். சுழுமுனை நாடி திறந்துவிட்டால் மரணம் இல்லை. மரணத்தை வென்ற மகான்கள் இந்த உலகில் இருக்க விரும்ப மாட்டார்கள் . அவர்கள் உடம்பில் இருந்து உயிரை பிரித்து சிவகலத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள். அதுவே முழுமையான வீடுபேறு.
★யோகம் என்பதை விளையாட்டாக செய்ய வேண்டியது தான். எதையும் serious ஆக செய்தால் ஆபத்து. முனிவர்கள் , சித்தர்கள் அட யோகம் செய்வார்கள். ஆனால் இல்லறத்தில் இருப்பவர்கள் கடும் தவம் செய்ய வேண்டிய தேவை இல்லை . எந்த செயலையும் தியானமாக மாற்றலாம். நடக்கும் போது, உண்ணும் போதும் , உறங்கும் போதும் சிவலயத்தில் இருந்தால் அது 24 மணி நேரமும் தவம் செய்ததற்கு சமம்.
★பதஞ்சலி மாமுனிவரைப் போலவே திருமூலரும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார். அவர் மேலும் நான்கு உன்னதமான யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார். அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால் இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம்.
மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம் எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.
★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம், அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும்.
முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
கேசரி யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆
★கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே. திருமந்திரம் -779.
★அண்ணாக்கை ஊடே அடைத்து அமுதுண்ணேன் அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.
★சூல் கொண்ட மேகம் என ஊமை நின்று சொறிவதைப் பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவேனே. – தாயுமானவர்.
★கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம் கூடிய முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் – அருணகிரிநாதர்.
★மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப் பற்றி பாடியுள்ளார்கள்
.
★கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன் கண்நரம்புகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும் நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து வரவேண்டும். நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல் நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்துவர வேண்டும். பார்வையை புருவ மத்தியில் குவிக்கவேண்டும். பெருவிரலை உட்பக்கமாக வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில் தொடும்படி வைத்துக் கொண்டு சுழுமுனை தியானம் செய்து வரவேண்டும்.
★நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம் சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம் சித்திக்கும். தொலைவில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர் சொல்கிறார்.
★நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை செல்லுமானால் நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அண்ணாக்கின் மேல் துவாரத்தில் நாக்கை நுழைத்தவுடன் உடல் மறதி ஏற்பட்டுவிடும். மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் உடல் அழியாது, உயிரும் பிரியாது. இயற்கை சீற்றங்களினால் அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க முடியாது. நகமும், முடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள் ஜீவசமாதியில் இருப்பது இவ்வாறே என்று சொல்லப் படுகிறது. தேரை, கருநாகம், நல்லபாம்பு போன்ற உயிரினங்களும் உணவு கிடைக்காத போது இந்த பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப் பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல் உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு கிடைக்கும் போது நாவை எடுத்து புசிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
★அனுபவம் உள்ள சித்தர்கள் தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக் கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர் உதவியோடு மெதுவாக வாயைத் திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை கால்கள் முடங்கி இருப்பதை மெதுவாகத் தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.
Comments
Post a Comment